டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்த படம் ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டியில் தனி ஒருவன் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி, "தனி ஒருவன் படத்தின் கதை முதலில் பிரபாஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர் லவ் படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவர் நடிக்கவில்லை" என்றார்.
அதன்பிறகு தான் ஜெயம் ரவி இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் 'துருவா' எனும் பெயரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




